Home One Line P1 கொவிட்-19: புதிதாக 1,594 சம்பவங்கள் பதிவு, மூவர் மரணம்

கொவிட்-19: புதிதாக 1,594 சம்பவங்கள் பதிவு, மூவர் மரணம்

352
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 28) வரையிலான, கடந்த 24 மணி நேரத்தில் 1,594 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன.

இதில் உள்ளூரில் 1,591 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 3 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 106,690 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று 1,181 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 85,592–ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 20,643 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 116 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 53 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று மூவர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 455-ஆக உயர்ந்துள்ளது.

அதிகபடியாக சிலாங்கூரில் 697 சம்பவங்களும், அதற்கு அடுத்த நிலையில் கோலாலம்பூரில் 194 சம்பவங்களும் பதிவாகி உள்ளன. ஜோகூரில் 191 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. நெகிரி செம்பிலான் மற்றும் சபாவில் முறையே 160 மற்றும் 157 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.