Home One Line P1 கொவிட்19: புதிதாக 1,925 சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்

கொவிட்19: புதிதாக 1,925 சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்

387
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 29) வரையிலான, கடந்த 24 மணி நேரத்தில் 1,925 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன.

இதில் உள்ளூரில் 1,915 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 10 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 108,615 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று 1,123 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 86,715–ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 21,443 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 117 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 55 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று இருவர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 457-ஆக உயர்ந்துள்ளது.

அதிகப்படியாக சிலாங்கூரில் 747 சம்பவங்களும், அதற்கு அடுத்த நிலையில் கோலாலம்பூரில் 360 சம்பவங்களும் பதிவாகி உள்ளன. பகாங்கில் 288 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சபாவில் 230 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. ஜோகூரில் 110 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.