Home One Line P1 அடுத்தாண்டு ஜூன் மாதம் பொதுத் தேர்தல் நடக்கலாம்

அடுத்தாண்டு ஜூன் மாதம் பொதுத் தேர்தல் நடக்கலாம்

375
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 15- வது பொதுத் தேர்தல் நடைபெறும் என்று பாஸ் தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும்படி கேட்டபோது, பாஸ் உதவித் தலைவர் முகமட் அமர் அப்துல்லா இந்த விஷயத்தை தெரிவித்தார்.

தேர்தலை எதிர்கொள்ள அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“தேசிய ஒருமித்த கருத்தை வலுப்படுத்தவும் கூட்டரசு மட்டத்தில் தேசிய கூட்டணியை வலுப்படுத்தவும் மூன்று கட்சிகளையும் பலப்படுத்துவதே கட்சியின் நோக்கம். மூன்று கட்சிகளுக்கிடையில் (பாஸ், அம்னோ மற்றும் பெர்சாத்து) நான் முன்னர் குறிப்பிட்டது போல, எந்தக் கட்சியும் தனித்து நிற்க முடியாது. அடுத்த பொதுத் தேர்தலில் தோல்வியுற்ற அரசாங்கமாக நாம் இருக்க வேண்டாமென்றால், வலுவான ஒத்துழைப்பு இருக்க வேண்டும். அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலை நாங்கள் எதிர்பார்க்கிறோம். தனிப்பட்ட முறையில் இது ஜூன் மாதமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், ” என்று அவர் இன்று கோத்தா பாருவில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

குறுகிய நாடாளுமன்ற பெரும்பான்மையைத் தொடர்ந்து தற்போதைய அரசாங்கம் எப்போதும் எதிர்க்கட்சிகளால் தொந்தரவு செய்யப்படுவதாக முகமட் அமர் கூறினார்.

“எப்போதுமே இடையூறு ஏற்படுகிறது. ஆனால், நாடாளுமன்றத்தில் எங்களுக்கு வலுவான பெரும்பான்மை இருந்தால் அரசாங்கம் குறுக்கீடு இல்லாமல் இயங்க முடியும். அதுதான் முக்கியம்,” என்று அவர் விளக்கினார்.