கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (டிசம்பர் 30) வரையிலான, கடந்த 24 மணி நேரத்தில் 1,870 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன.
இதில் உள்ளூரில் 1,868 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 2 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 110,485 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
இன்னும், 22,562 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 131 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 62 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இன்று 6 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 463-ஆக உயர்ந்துள்ளது.
அதிகப்படியாக ஜோகூரில் 607 சம்பவங்களும், அதற்கு அடுத்த நிலையில் சிலாங்கூரில் 472 சம்பவங்களும் பதிவாகி உள்ளன. சபாவில் 280 சம்பவங்கள் பதிவாகி உள்ள நிலையில், கோலாலம்பூரில் 219 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.