Home One Line P2 பிக் பாஸ் இறுதிச் சுற்று : எஞ்சிய மூவர் ரியோ, ஆரி, பாலாஜி – ரியோ...

பிக் பாஸ் இறுதிச் சுற்று : எஞ்சிய மூவர் ரியோ, ஆரி, பாலாஜி – ரியோ வெளியேற்றப்பட்டார்

718
0
SHARE
Ad
நடிகர் ரியோ

சென்னை : தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் “பிக்பாஸ்” தொடர் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜனவரி 17ஆம் தேதி) நிறைவுக்கு வருகிறது.

சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்குத் தேர்வான ஆறு பேர்களில் ஒருவரான கேப்பிரியல்லா  10 இலட்ச ரூபாய் அடங்கிய பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து இன்றைய இறுதிச் சுற்றில் ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். சோம் சேகர், ரியோ, பாலாஜி, ஆரி, ரம்யா பாண்டியன் ஆகியோரே அந்த ஐவராவர்.

#TamilSchoolmychoice

அவர்களில் இருந்து ஒருவர் ஒருவராக இறுதிச் சுற்றில் வெளியேற்றப்படுகின்றனர்.

அதன்படி சோம் சேகர் முதலில் வெளியேறுவதாக இன்றைய இறுதி நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அறிவித்தார். அவரை பிக்பாஸ் இல்லத்தின் உள்ளே சென்று கடந்த ஆண்டு வெற்றியாளர் மலேசியர் முகேன் ராவ் வெளியே அழைத்து வந்தார்.

அடுத்ததாக, இன்னொருவரை வெளியேற்ற வேண்டுமென கடந்த ஆண்டு பங்கேற்பாளரான கவினை கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். அவரும் பிக்பாஸ் இல்லம் உள்ளே செல்ல அங்கிருக்கும்போது ரம்யா பாண்டியனை வெளியேற அழைத்து வருமாறு கவினை பிக் பாஸ் பணித்தார்.

கவினும் ரம்யா பாண்டியனை அழைத்துக் கொண்டு பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறினார்.

ஆக இப்போது முதல் மூன்று நிலைகளில் வெற்றி பெறுவதற்கான தகுதியோடு ஆரி, ரியோ, பாலாஜி ஆகிய மூவர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

அடுத்த கட்டமாக கடந்த ஆண்டு பிக்பாஸ் போட்டியாளர் ஷெரின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டினுள் அனுப்பி வைக்கப்பட்டார். உள்ளே சென்ற அவர் ரியோவை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்தார்.

இதைத் தொடர்ந்து எஞ்சிய போட்டியாளர்களான ஆரி, பாலாஜி இருவரில் ஒருவர்தான் வெற்றியாளர் ஆவார் என்பது உறுதியாகியுள்ளது.