Home One Line P1 கொவிட்-19: 14 பேர் மரணம்- புதிதாக 3,631 சம்பவங்கள் பதிவு

கொவிட்-19: 14 பேர் மரணம்- புதிதாக 3,631 சம்பவங்கள் பதிவு

396
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 19) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகமான அளவில் 3,631 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. தொடர்ந்து கொவிட்-19 தொற்றுகள் குறையாமல் அதிகமான அளவில் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதில் உள்ளூரில் 3,624 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 7 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 165,371 சம்பவங்கள் இதுவரையில் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று வரையிலான கடந்த ஒருநாளில் 2,944 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 125,288–ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 39,464 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 238 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 96 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று ஒரே நாளில் 14 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 619-ஆக உயர்ந்துள்ளது.