இதனிடையே, கடுமையான நடைமுறைகளுக்கு உட்பட்டு மேலும் இரண்டு வாரங்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.
புதிய நடைமுறைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார். பிப்ரவரி 5-ஆம் தேதி தொடரும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை பிப்ரவரி 18 அன்று முடிவடையும்.
கடந்த மாதம், நாட்டில் கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து அரசாங்கம் மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அறிவித்தது. இதில் சரவாக்கில் ஒரு சில மாவட்டங்கள் மட்டுமே சம்பந்தப்பட்டன.
Comments