Home One Line P1 முகமட் ஈசாவுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 15 மில்லியன் அபராதம்

முகமட் ஈசாவுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 15 மில்லியன் அபராதம்

538
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கூச்சிங்கில் ஒரு தங்கும்விடுதியை வாங்கியது தொடர்பாக 3.09 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட ஒன்பது ஊழல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பெல்டா முன்னாள் தலைவர் ஈசா சமாட்டுக்கு உயர் நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 15 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்துள்ளது.

71 வயதான ஈசாவுக்கு எதிராக நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி இந்த தண்டனையை வழங்கினார்.

#TamilSchoolmychoice

ஒன்பது ஊழல் வழக்குகள் ஒவ்வொன்றிற்கும் ஈசாவுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவை ஒரே நேரத்தில் செயல்படுத்துவதற்காக உத்தவிடப்பட்டது.

கடந்தாண்டு ஜூன் 16 அன்று, தங்கும் விடுதியை வாங்கியது தொடர்பாக நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டில் முகமட் ஈசாவை உயர் நீதிமன்றம் விடுவித்தது.

எப்ஐசிஎஸ்பி மெர்டேகா பேலஸ் ஹோட்டல் மற்றும் சூட்ஸை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்ததன் பேரில், 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதியன்று, முகமட் ஈசா நம்பிக்கை மோசடி மற்றும் 3 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் பெற்றக் குற்றத்தினை மறுத்தார்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 409-இன் கீழ், 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதியன்று, பெல்டா கட்டத்தின் 50-வது மாடியில் நம்பிக்கை மோசடி குற்றத்தைச் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஊழலுக்கு எதிரான அனைத்து குற்றங்களும் அதே ஆண்டில் ஏப்ரல் 29 முதல் 2015, டிசம்பர் 15- க்கு இடையில் 49-வது மாடியில் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.