Home One Line P1 பிப்ரவரி 5 முதல் இரவு சந்தைகள், முடிதிருத்தும் கடைகள், கார் கழுவுமிடங்கள் செயல்படும்

பிப்ரவரி 5 முதல் இரவு சந்தைகள், முடிதிருத்தும் கடைகள், கார் கழுவுமிடங்கள் செயல்படும்

521
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் மூன்றாவது வாரத்திலிருந்து இரவு சந்தைகள், முடிதிருத்தும் கடைகள் மற்றும் அலங்காரம், அத்துடன் கார் கழுவும் மையங்களும் திறக்க அனுமதிக்கப்படும்.

இவர்கள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுவார்கள் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்துள்ளார். முடிதிருத்தும் கடைகள், அலங்காரக் கடைகளில் முடி வெட்டுதல் மட்டுமே அனுமதிக்கப்படும்.

இந்த வணிகங்களிலிருந்து புதிய தொற்று குழுக்கள் கள் எதுவும் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.