Home One Line P1 அம்னோ, பெர்சாத்து, பாஸ் கூட்டணி எந்நேரத்திலும் உடையலாம்!

அம்னோ, பெர்சாத்து, பாஸ் கூட்டணி எந்நேரத்திலும் உடையலாம்!

498
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்து, பாஸ் மற்றும் அம்னோ ஆகியவை அவரவர் அரசியல் நலன்களுக்காக மட்டுமே ஒன்றாக உள்ளன. இவற்றின் ஒத்துழைப்பு பொதுத் தேர்தலின் போது உடையக்கூடியது என்றும், அது வீழ்ச்சியடையும் எனவும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

“இந்த நிலைமை நாட்டிற்கு நன்மைகளைத் தரவில்லை, ஏனென்றால் நாட்டை எவ்வாறு அபிவிருத்தி செய்வது மற்றும் நிர்வகிப்பது என்பதில் அவர்களுக்கு சரியான பார்வை இல்லை,” என்று அவர் ஒரு எப்எம்டி நேர்காணலில் கூறினார்.

“அவர்கள் இடங்களை ஒதுக்குவதில் கடினமான சூழலை எதிர்கொள்வார்கள். எந்த உடன்பாடும் இல்லாவிட்டால், அவர்களுக்கிடையில் சண்டைகள் ஏற்படும், இது அவர்களுக்கு அல்லது நாட்டிற்கு நல்லதல்ல, “என்று மகாதீர் கூறினார்.

#TamilSchoolmychoice

முவாபாக்கட் நேஷனல் மூலம் பாஸ்-அம்னோ ஒத்துழைப்பும் நீடிக்காது என்று மகாதீர் தெரிவித்தார்.

“உண்மையில், அவர்கள் (பாஸ்-அம்னோ) ஒருபோதும் நெருக்கமாக இருந்ததில்லை. பாஸ் அம்னோவை காபிர் என்று கண்டித்துள்ளது. ஆகவே, காபிர்களுடன் பணிபுரியும் நபர்கள் காபிர்களாக மாற்றிவிடுவார்கள் என்று பாஸ் கூறும்போது அவர்கள் எவ்வாறு ஒன்றாக வேலை செய்ய முடியும், ” என்று அவர் கூறினார்.

தெளிவாக, இரு கட்சிகளும் அரசியல் நலன்களுக்காக மட்டுமே ஒத்துழைக்கின்றன, கொள்கைகளால் வழிநடத்தப்படவில்லை.

“எனவே, இந்த வகையான உறவு நல்ல ஒத்துழைப்பின் அடிப்படையாக இருக்காது. இது அரசியல் இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட உறவு மட்டுமே,” என்று அவர் கூறினார்.

அம்னோவுக்கும் பெர்சாத்துவுக்கும் இடையில் தகராறு வெடிக்கும் என்று மகாதீர் மேலும் கூறினார்.

ஏனென்றால், பெர்சாத்து விரும்பிய இடங்கள் உட்பட அதன் அனைத்து பாரம்பரிய இடங்களிலும் போட்டியிட விரும்புவதாக அம்னோ ஏற்கனவே கூறியுள்ளது.

“இருப்பினும்,  தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தாலும், அவர்களின் உறுப்பினர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள். உதாரணமாக, பாஸ் அடிமட்ட மக்கள் அம்னோ வேட்பாளர்களை ஆதரிக்க மாட்டார்கள், ” என்றார் மகாதீர்.