Home One Line P1 6 ஆண்டுகால போராட்டம் – முஸ்லீம் மதத்திலிருந்து வெளியேறிய பெண்மணி

6 ஆண்டுகால போராட்டம் – முஸ்லீம் மதத்திலிருந்து வெளியேறிய பெண்மணி

1067
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : தந்தை முஸ்லீம் மதத்தவர். தாயாரோ புத்த மதத்தைச் சேர்ந்தவர். வழக்கமாக தந்தையாரின் மதமான முஸ்லீம் மதத்தைப் பிள்ளைகள் பின்பற்றுவதுதான் மலேசியாவில் வழக்கம்.

ஆனால், தன்னை முஸ்லீம் அல்லாதவர் என அறிவிக்க வேண்டும் வழக்கு தொடுத்தார் ரோஸ்லிசா இப்ராகிம்.

பிறப்பு முதலே தான் முஸ்லீமாக வளர்க்கப்படவில்லை என 39 வயதான ரோஸ்லிசா 6 ஆண்டுகால நீதிமன்றப் போராட்டம் நடத்தினார்.

#TamilSchoolmychoice

கடந்த வெள்ளிக்கிழமை நாட்டின் உச்ச நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றம் அவருடைய மேல்முறையீட்டை விசாரித்து அவர் முஸ்லீம் அல்ல எனத் தீர்ப்பளித்தது.

நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் (படம்) தலைமையில் 9 கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 5) வழங்கியிருக்கிறது.

ரோஸ்லிசா தந்தையார் முஸ்லீமாக இருந்தாலும் அவரது தாயார் புத்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தார். ரோஸ்லிசா பெற்றோர் சட்டபூர்வ திருமணம் புரிந்ததற்கான ஆதாரமும் இல்லை.எனவே, தந்தையின் மதத்தை மட்டும் வைத்து ரோஸ்லிசா முஸ்லீம் என்று கூற முடியாது எனவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.

உயர் நீதிமன்றமும் மேல்முறையீட்டு நீதிமன்றமும் ரோஸ்லிசாவின் வழக்கு மனுவை நிராகரித்து தீர்ப்பு வழங்கின.

கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீட்டில் தெங்கு மைமுன் வழங்கிய தீர்ப்பை 6 நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். எஞ்சிய மூன்று நீதிபதிகள்  ரோஸ்லிசாவுக்கு வழங்க வேண்டிய முடிவுகள் குறித்து மாற்றுக் கருத்துகள் கொண்டிருந்தனர்.

பிறந்தது முதலே ரோஸ்லிசா அவரின் தாயாரால் புத்த மதத்தினராக வளர்க்கப்பட்டார். இன்றுவரை புத்த மதத்தையே பின்பற்றி வருகிறார் என அவரின் சார்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன.