Home One Line P1 கொவிட்-19: 2,176 தொற்றுகள் பதிவு- 10 பேர் மரணம்

கொவிட்-19: 2,176 தொற்றுகள் பதிவு- 10 பேர் மரணம்

388
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (பிப்ரவரி 15) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,176 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இதில் 2,175 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 1 தொற்று வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால் பதிவானவை.

இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 266,445 ஆக அதிகரித்துள்ளன.

#TamilSchoolmychoice

கடந்த ஒரு நாளில் மட்டும் 4,521 பேர் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர். தொற்றுகளில் இருந்து குணமாகி இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 218,335 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 47,135 ஆகும்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 260 பேர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர்களில் 112 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இன்றைய ஒரு நாளில் 10 மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 975 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்கள் அளவில் மிக அதிகமான சம்பவங்கள் தொடர்ந்து சிலாங்கூரில் பதிவாகி உள்ளன. 910 சம்பவங்கள் சிலாங்கூரில் மட்டும் பதிவாகி உள்ளன. இதை அடுத்து 269 சம்பவங்கள் ஜோகூரிலும், கோலாலம்பூரில் 182 சம்பவங்களாக தொற்றுகள் பதிவாகியுள்ளன.