Home One Line P1 கொவிட்-19: 13 பேர் மரணம்- 2,936 சம்பவங்கள் பதிவு

கொவிட்-19: 13 பேர் மரணம்- 2,936 சம்பவங்கள் பதிவு

662
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 19) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,936 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இதில் 2,919 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 17 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால் பதிவானவை.

இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 277,811 ஆக அதிகரித்துள்ளன.

#TamilSchoolmychoice

கடந்த ஒரு நாளில் மட்டும் 4,889 பேர் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர். தொற்றுகளில் இருந்து குணமாகி இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 239,971 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 36,797 ஆகும்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 220 பேர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர்களில் 104 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இன்றைய ஒரு நாளில் 13 மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 1,043- ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்கள் அளவில் மிக அதிகமான சம்பவங்கள் தொடர்ந்து சிலாங்கூரில் பதிவாகி உள்ளன. 978 சம்பவங்கள் சிலாங்கூரில் மட்டும் பதிவாகி உள்ளன. இதை அடுத்து 730 சம்பவங்கள் ஜோகூரிலும், கோலாலம்பூரில் 227 சம்பவங்களாக தொற்றுகள் பதிவாகியுள்ளன. சரவாக்கில் 199 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.