Home One Line P1 நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் அம்னோ சக்திவாய்ந்ததாக இருந்த காலம் முடிந்துவிட்டது

நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் அம்னோ சக்திவாய்ந்ததாக இருந்த காலம் முடிந்துவிட்டது

356
0
SHARE
Ad

கோலாலம்பூர்:  நாட்டின் அரசியல் சூழலில், அம்னோ பெரிய அரசியல் சக்தியாக இருந்த சகாப்தம் முடிந்துவிட்டது என்று பெர்சாத்து இளைஞர் பிரிவு தலைவர் வான் அகமட் பைசால் வான் அகமட் கமால் கூறினார்.

அம்னோ இப்போது நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் ஒரு சக்திவாய்ந்ததாக இல்லை என்பதை ஏற்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

“இப்போதைய அரசியல் நிலைமையில், அனைத்து கட்சிகளும் அவற்றின் அரசியல் இலக்கை அடைய ஒன்றாக செயல்பட வேண்டும். நாம் ஒன்றாக பணி புரியாவிட்டால், அது அனைவருக்கும் பாதகமாக இருக்கும், பின்னர் (தேர்தலில்) இழக்க நேரிடும்,” என்று நேற்று ஷா ஆலாமில் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

வரவிருக்கும் 15- வது பொதுத் தேர்தலில் மூன்று முனைப் போட்டிகளைத் தவிர்ப்பதற்காக தேசிய கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்க அம்னோ தயாராக இருக்கும் என்று பெர்சாத்து இன்னும் நம்புவதாக வான் அகமட் பைசால் கூறினார்.

வரவிருக்கும் பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடன் அம்னோ இணையாது என்று செய்தி வெளியானதை அடுத்து அவர் இவ்வாறு கூறினார்.