Home One Line P1 சீன, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவு அனுமதி இரத்து

சீன, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவு அனுமதி இரத்து

512
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 பரவும் அபாயத்தைக் கட்டுப்படுத்த சீன மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவை அரசாங்கம் உடனடியாக இரத்து செய்துள்ளது.

அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டினர் நுழைவதற்கான தடைகளும் தொடர்கின்றன என்று உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.

“இந்த விஷயம் எதிர்காலத்தில் வெளிநாட்டினரின் நுழைவு மற்றும் கொவிட் -19 மலேசியாவிற்கு பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான முக்கியமான கொள்கைகளில் ஒன்றாகும்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சுற்றுலா அல்லது பிற நோக்கத்திற்காக மலேசியாவிற்குள் நுழைந்த சீன மற்றும் இந்திய வருகையாளர்களுக்கு 15 நாட்களுக்கு இந்த நுழைவு அமல்படுத்தப்பட்டது. சீன சுற்றுலாப் பயணிகளுக்காக 2016-இல் மார்ச் 1 அன்று இந்த செயல்முறை செயல்படுத்தப்பட்டது. 2017-இல் ஏப்ரல் 1 அன்று இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு இது விரிவாக்கப்பட்டது.

“காதல் மோசடி”, மக்காவ் மோசடி மற்றும் மனித கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவதோடு, மூன்றாம் நாடுகளுக்கு குடியேற விரும்பும் சீனர்கள் மற்றும் இந்தியர்கள் கடத்தல், உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக சில தரப்புகளால் இந்த நுழைவு அனுமதி வசதிகள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தன.