Home One Line P1 சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீக்கம்

சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீக்கம்

421
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் மார்ச் 5 முதல் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலுக்கு வருவதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.

மாநில அரசின் வேண்டுகோளின்படி – சபாவைத் தவிர, அனைத்து மாநிலங்களிலும் மாவட்ட எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படுகிறது.

இருப்பினும், நாடு முழுவதும் மாநிலங்களுக்கு இடையிலான பயணம் தடைசெய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அதே நேரத்தில், கெடா, கிளந்தான், நெகிரி செம்பிலான், சரவாக் மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ளது.

மலாக்கா, பகாங், திரெங்கானு, சபா, புத்ராஜெயா மற்றும் லாபுவானுக்கு, மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மார்ச் 5 முதல் அமல்படுத்தப்படும்.