Home One Line P1 மஇகா: கட்சித் தலைவர் தேர்தல் ஜூன் மாதம் நடைபெறும்

மஇகா: கட்சித் தலைவர் தேர்தல் ஜூன் மாதம் நடைபெறும்

509
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மஇகாவின் 2019 மற்றும் 2020 ஆண்டு கூட்டம் ஏப்ரல் 3- ஆம் தேதி கிள்ளானில் நடைபெறும் என்று கட்சித் தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த ஆண்டு பொதுக் கூட்டத்தில் 400 பிரதிநிதிகள் நேரடியாகவும், 400 பிரதிநிதிகள் இயங்கலையிலும் கலந்து கொள்வர் என்று அவர் கூறினார்.

கட்சித் தலைவர் தேர்தல், ஏப்ரல் 5 முதல் மே 5 கிளைத் தேர்தல்களுக்குப் பிறகு ஜூன் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொவிட் -19 நிலைமையைப் பொறுத்து பிற உயர் கட்சி பதவிகளின் தேர்தல் பின்னர் நடைபெறும்.