Home One Line P1 ரமலான் பசார் இந்த ஆண்டு அனுமதிக்கப்படலாம்

ரமலான் பசார் இந்த ஆண்டு அனுமதிக்கப்படலாம்

621
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்த ஆண்டு ரமலான் பசார் அனுமதிக்கக்கூடும் என்று வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சர் சுரைடா கமாருடின் சுட்டிக்காட்டினார். நேர்த்தியான மற்றும் முழுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் அமல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

இந்த விவகாரம் விரைவில் தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

“நான் இதில் பிரச்சனை இருப்பதாக காணவில்லை, ஏனென்றால் சந்தை மற்றும் இரவு சந்தை திறக அனுமதித்திருக்கிறோம். இதை செயல்படுத்தலாம் (ரமலான் பஜார்), ” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு உட்பட்ட கூட்டரசு பிரதேசமும், நெகிரி செம்பிலானும் இந்த ஆண்டு ரமலான் பசாரை அனுமதிக்க ஒப்புக்கொண்டன, ஆனால் இன்னும் பாதுகாப்பு மன்றத்தின் இறுதி முடிவுக்காக காத்திருக்கின்றன.