Home One Line P1 இனி நாடு முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தேவைப்படாது

இனி நாடு முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தேவைப்படாது

668
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடு முழுவதும் அல்லது மாநிலம் முழுவதுமான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அரசாங்கம் இனி செயல்படுத்தத் தேவையில்லை என்று பிரதமர் கூறினார்.

தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதால், இந்த விஷயத்தை கணக்கில் எடுத்துக்கொண்டதாக மொகிதின் யாசின் கூறினார்.

“மறுபுறம், நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை, வட்டாரங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும் மற்றும் தொடர்புடைய தொற்று குழுக்கள் இருக்கும் இடங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பொருளாதார நடவடிக்கைகளில் எதிர்மறையான தாக்கத்தை குறைக்க அறிவியல் மற்றும் தரவுகளின் அடிப்படையில் மேலும் இலக்கு வைக்கப்பட்ட கொவிட் -19 பரிமாற்றக் கட்டுப்பாட்டு திட்டத்தையும் அரசாங்கம் செயல்படுத்தும் என்று இன்று ஒரு நேரடி ஒளிபரப்பில் மொகிதின் கூறினார்.