Home One Line P1 21,378 வெளிநாட்டுத் தொழிலாளர்களை குடிநுழைவுத் துறை கண்காணிக்கிறது

21,378 வெளிநாட்டுத் தொழிலாளர்களை குடிநுழைவுத் துறை கண்காணிக்கிறது

647
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு முதல் தற்காலிக பணி வருகை அனுமதி (பி.எல்.கே.எஸ்) கும்பல்களின் சேவைகளைப் பயன்படுத்துவதாக சந்தேகிக்கப்படும் 21,378 வெளிநாட்டுத் தொழிலாளர்களை குடிநுழைவுத் துறை கண்காணித்து வருவதாக அதன் இயக்குநர் கைருல் சைமி டாவுட் தெரிவித்துள்ளார்.

தோட்டங்கள், உற்பத்தி மற்றும் துப்புரவு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிநாட்டினர் பணியாற்றுவதாக நம்பப்படுகிறது என்றார்.

“கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கும்பல், வெளிநாட்டினரைச் சேர்ந்த நாடுகளில் ஈடுபடவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த அனுமதிகளை வாங்கியவர்கள் தனிநபர்கள் மற்றும் முதலாளிகள் மட்டுமே.

#TamilSchoolmychoice

“வெளிநாட்டு தொழிலாளர்கள் பற்றிய தகவல்கள் கணினி அமைப்பில் உள்ளன, ” என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

இந்தக் கும்பல் கணினி அமைப்பை ஊடுருவ முடிந்தாலும், நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட வெளிநாட்டினரின் தடுப்புப்பட்டியல் நிலையை மாற்ற அவர்கள் தவறிவிட்டனர் என்று அவர் கூறினார்.