Home One Line P1 நஜிப் மீதான அதிகார அத்துமீறல் குற்றச்சாட்டு தவறானது!

நஜிப் மீதான அதிகார அத்துமீறல் குற்றச்சாட்டு தவறானது!

489
0
SHARE
Ad

கோலாலம்பூர்: குற்றவியல் தரத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்கு நஜிப் ரசாக் பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி கூறுவது தவறானது என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

இந்த முறையீட்டை அப்துல் கரீம் அப்துல் ஜலீல் தலைமையிலான மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர்.

“நீதிபதி அவரை தற்காத்துக் கொள்ள கட்டளையிடுவது மிகவும் பாரபட்சமானது,” என்று தற்காப்பு வழக்கறிஞர் பார்ஹான் ரீட் கூறினார்.

#TamilSchoolmychoice

எஸ்ஆர்சி நிறுவனத்தின் 4 பில்லியன் கடனுக்கு அரசாங்க உத்தரவாதங்களை வழங்கியதன் மூலம் பிரதமராக தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக நஜிப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

1எம்டிபியின் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்குச் சொந்தமான 42 மில்லியனுடன் தொடர்புடைய மூன்று குற்றவியல் நம்பிக்கை மோசடி மற்றும் மூன்று பண மோசடி குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டது.

கடந்த ஜூலை மாதம், உயர்நீதிமன்ற நீதிபதி நஸ்லான் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, எஸ்ஆர்சி இன்டர்நேஷனலைச் சேர்ந்த 42 மில்லியனுடன் தொடர்புடைய ஏழு ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறிந்த பின்னர் 210 மில்லியன் அபராதம் செலுத்த உத்தரவிட்டார்.