Home One Line P1 ‘நஜிப் நாட்டிற்கு சாதகமான கூற்றை வெளியிட வேண்டும்!’- ஷாஹிடான்

‘நஜிப் நாட்டிற்கு சாதகமான கூற்றை வெளியிட வேண்டும்!’- ஷாஹிடான்

559
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்லிஸ் அம்னோ தலைவர் ஷாஹிடான் காசிம், தேசிய கூட்டணி அரசாங்கம் குறித்து சாதகமான அறிக்கையை வெளியிடுமாறு நஜிப் ரசாக்கிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஷாஹிடானின் கூற்றுப்படி, முன்னாள் பிரதமரான நஜிப்பின் நேர்மறையான பார்வை நாட்டிற்கு முதலீட்டாளர்களை ஈர்க்க உதவும் என்று கூறினார்.

“முன்னாள் பிரதமர், அரசாங்கத்தைப் பற்றி நேர்மறையான பார்வையை கொடுக்க நான் பரிந்துரைக்கிறேன், முதலீட்டாளர்களை உள்ளே வரச் சொல்லுங்கள்.

#TamilSchoolmychoice

“இல்லையெனில், முதலீட்டாளர்கள் உள்ளே வர மாட்டார்கள். நாட்டின் முன்னாள் பெரிய தலைவர்கள் அரசாங்கத்திற்கு உதவ வழிகளைக் கண்டறிய வேண்டும், “என்று அவர் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

தேசிய கூட்டணி அரசாங்கத்தின் கொள்கைகளை பெரும்பாலும் விமர்சிக்கும் அரசியல்வாதிகளில் நஜிப்பும் ஒருவர். பெர்சாத்துவுடன் இனி பணியாற்றுவதற்கான கட்சியின் முடிவை ஆதரித்த அம்னோ தலைவர்களில் அவரும் ஒருவர்.

தேசிய கூட்டணி அரசு பொருளாதாரத்தை நிர்வகிக்கத் தவறிவிட்டதாகவும், கொவிட் -19 பரவலைக் கட்டுபடுத்த தவறியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.