மலேசியாவில் தரவுத் தளம் (டாத்தா சென்டர்- Data center) ஒன்றை மைக்ரோசாப்ட் அமைக்கிறது. அதைத் தொடர்ந்து “பெர்சாமா மலேசியா” (Bersama Malaysia) என்ற திட்டத்தின் கீழ் அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து எதிர்வரும் 2023-ஆம் ஆண்டுக்குள்ளாக சுமார் 1 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் பயிற்சித் திட்டங்களையும் வழங்கவிருக்கிறது.
இதன்மூலம், மலேசியர்களுக்கும், வணிகங்களுக்கும் கூடுதலான பொருளாதார வாய்ப்புகள் ஏற்படும்.
மேலும் சில அனைத்துலக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து மைக்ரோசோப்ட் தனது மலேசியத் திட்டங்களை செயல்படுத்தும்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை ஏப்ரல் 21-ஆம் தேதி பிரதமர் மொகிதின் யாசின் முன்னிலையில் நடைபெற்றது.