Home One Line P1 அம்னோ- பெர்சாத்து மோதலைத் தீர்க்க பாஸ் நடுவராக செயல்படும்!

அம்னோ- பெர்சாத்து மோதலைத் தீர்க்க பாஸ் நடுவராக செயல்படும்!

685
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலுக்கு முன்னர் அம்னோவிற்கும் பெர்சாத்துவுக்கும் இடையிலான மோதலைத் தீர்ப்பதற்கு நடுவராக இருக்க பாஸ் தயாராக உள்ளது என்று பாஸ் மத்திய செயலவைக் குழுத் தலைவர் நிக் முகமட் சவாவி சல்லே கூறினார்.

இரு கட்சிகளும் தங்கள் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பொதுவான காரணத்தை உருவாக்க தனது கட்சி ஒரு சந்திப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்யலாம் என்று அவர் கூறினார்.

“(சம்பந்தப்பட்ட கட்சிகளின்) ஒருங்கிணைப்பை அடைவதற்கு ஒரு தீர்வு காணப்படவில்லை என்றால், அது நாட்டில் மலாய் முஸ்லிம்களின் நிலையை பாதிக்கக்கூடும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்,” என்று நிக் முகமட் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

கட்சிகளுக்கு இடையேயான சண்டைகள் நிறுத்தப்படாவிட்டால் மலாய் கட்சிகள் அரசியல் ஆதிக்கத்தை இழக்கும் என்ற கவலைகள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்குத் திரும்பினால் அம்னோவுக்கும் பெர்சாத்துவுக்கும் இடையிலான சர்ச்சை தீர்க்கப்படலாம் என்று நிக் முகமட் கூறினார்.

“இஸ்லாமியர்களை ஒன்றிணைக்க பாஸ் தொடர்ந்து பாடுபடும், ஏனெனில் இது இஸ்லாத்தின் இரண்டாவது கொள்கையாகும்,” என்று அவர் கூறினார்.