Home உலகம் தடுப்பூசிகளை அதிகப்படுத்த அமெரிக்கா புதிய திட்டம்

தடுப்பூசிகளை அதிகப்படுத்த அமெரிக்கா புதிய திட்டம்

392
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்கா அதன் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தின் 100 நாட்களுக்குள் 200 மில்லியன் கொவிட் -19 தடுப்பூசியை விநியோகித்துள்ளது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, நாட்டின் மக்களைப் பாதுகாப்பதற்கான தடுப்பூசி நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்கும் முயற்சியில் ஒரு புதிய கட்டம் தொடங்கும். வெள்ளை மாளிகையில் தனது உரையில் இது குறித்து பேசிய பைடன், இந்த தடுப்பூசியை தன்னையும் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாக்க முடியும் என்று கூறினார்.

“இது அமெரிக்க மக்களின் வெற்றி. ஒருங்கிணைந்தது மற்றும் உறுதியானது. இந்த கட்டத்தில் நாம் இலக்கை அடைந்துவிட்டோம். தடுப்பூசி முயற்சியில் நாங்கள் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைவோம்,” என்று பைடன் கூறினார்.

#TamilSchoolmychoice

பைடன் தலைமையிலான அரசாங்கம் இப்போது தடுப்பூசி பதிவுகளை மேலும் அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

முன்னதாக, பைடன் சிறு நிறுவனங்களுக்கு தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான விடுப்புக்கு ஒப்புதல் அளிக்க அல்லது வரிவிதிப்பு விளைவுகள் காரணமாக நோய்வாய்ப்பட்ட விடுப்பு தேவைப்படுபவர்களுக்கு வரி நிவாரணம் அறிவித்தார்.