Home நாடு கொவிட்-19: மரணங்கள் 11 ஆக உயர்வு – 2,717 புதிய தொற்றுகள்

கொவிட்-19: மரணங்கள் 11 ஆக உயர்வு – 2,717 புதிய தொற்றுகள்

463
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 24) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,717 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் 2,691 பேர் உள்நாட்டினர். 26 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் ஆவர். இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 390,252 ஆக அதிகரித்துள்ளன.

கடந்த ஒரு நாளில் மட்டும் 2,292 பேர் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர். தொற்றுகளில் இருந்து குணமாகி இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 365,900 ஆக அதிகரித்துள்ளது.

#TamilSchoolmychoice

இன்றைய நிலையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 22,926 ஆகும். சிகிச்சை பெற்று வருபவர்களில் 272 பேர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர்களில் 124 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இன்று 11 பேர் மரணமடைந்ததைத் தொடர்ந்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 1,426 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்கள் அளவில் மிக அதிகமான சம்பவங்கள் 768 என்ற எண்ணிக்கையில் சிலாங்கூரில் பதிவாகி உள்ளன. சரவாக்கில் 570 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

அதற்கடுத்த நிலையில் கோலாலம்பூரில் 240 தொற்றுகளும், ஜோகூரில் 126 தொற்றுகளும் பதிவாகியிருக்கின்றன.