Home நாடு இந்தியாவிலிருந்து நாட்டிற்குள் நுழைவதை கட்டுப்படுத்துவது இனவெறி முடிவு அல்ல

இந்தியாவிலிருந்து நாட்டிற்குள் நுழைவதை கட்டுப்படுத்துவது இனவெறி முடிவு அல்ல

461
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்தியாவில் இருந்து நாட்டிற்குள் நுழைவதை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவு பாரபட்சமான அல்லது இனவெறி சார்ந்தது அல்ல என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

மாறாக, அங்கு ஏற்படுள்ள புதிய கொவிட் -19 தொற்று பரவலை மலேசியாவிற்கு பரவாமல் கட்டுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

“இந்தியாவில் இருந்து வருபவர்களை அனுமதிக்கவில்லை. இது இனவெறி அல்லது பாகுபாடு அல்ல. இது அங்கிருந்து கொண்டுவரப்படும் தொற்றைக் கட்டுப்படுத்தவே என்பதை உறுதி செய்வதற்காகவே.

#TamilSchoolmychoice

“எனவே நாங்கள் அவர்களை மலேசிய எல்லைக்குள் அனுமதிக்க மாட்டோம்,” என்று அவர் தெரிவித்தார்.