Home நாடு புதிய காவல் துறை தலைவராக அக்ரில் சானி அப்துல்லா சானி நியமனம்

புதிய காவல் துறை தலைவராக அக்ரில் சானி அப்துல்லா சானி நியமனம்

401
0
SHARE
Ad
படம்: நன்றி டி ஸ்டார்

கோலாலம்பூர்: அடுத்த செவ்வாய்க்கிழமை (மே 4) முதல் புதிய காவல் துறை தலைவராக துணை காவல் துறை தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய காவல் துறை தலைவர் நியமனக் கடிதம், உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடினிடம் இருந்து இன்று அவருக்கு கிடைத்தது.

2019-ஆம் ஆண்டு மே 4 முதல் 2021 மே 3 வரையிலான காலத்திற்கு பதவிக்கு நியமிக்கப்பட்ட அப்துல் ஹாமிட் பாடோருக்கு பதிலாக அக்ரில் நியமிக்கப்படுவார்.

#TamilSchoolmychoice

அண்மையில் பாலியல் தொந்தரவு குறித்த ஒரு மாணவியின் கருத்தை “விளையாட்டுத்தனமானது (ஜோக்)” எனக் குறிப்பிட்டது மகளிர் அமைப்புகள் மத்தியிலும், சமூக ஊடகங்களிலும் பரவலாகச் சாடப்பட்டது.