இது நேற்றைய எண்ணிக்கையை விட ஆயிரம் தொற்றுகள் கூடுதலாகும்.
மிக அதிகமான தொற்றுகளை சிலாங்கூர் மீண்டும் பதிவு செய்தது. 1,424 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்தது. கோலாலம்பூர் 436 தொற்றுகளைப் பதிவு செய்தது.
நாட்டிலேயே இரண்டாவது நிலையில் மிக அதிகமாக கொவிட்-19 தொற்றுகளைப் பதிவு செய்த மாநிலமாக சரவாக் இருக்கிறது. இங்கு 750 தொற்றுகள் பதிவாயின.
இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 432,425 ஆக உயர்ந்துள்ளது.
மொத்தமுள்ள 4,498 தொற்றுகளில் 4,493 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 5 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.
கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 34,789 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 372 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 211 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.