Home வணிகம்/தொழில் நுட்பம் 1எம்டிபி: 96.60 பில்லியன் ரிங்கிட்டை மீட்க 22 வழக்குகள்

1எம்டிபி: 96.60 பில்லியன் ரிங்கிட்டை மீட்க 22 வழக்குகள்

431
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 1 எம்டிபி தொடர்பாக களவாடப்பட்ட பணத்தை மீட்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 1 எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி நிறுவனங்கள் சார்பில் அவற்றின் சட்டபூர்வ பிரதிநிதிகள் இதுவரையில் 22 பொது வழக்குகளைத் தொடுத்திருக்கின்றனர்.

இதன்மூலம் 96.60 பில்லியன் ரிங்கிட்டை (23 பில்லியன் அமெரிக்க டாலர்) மீட்க அவர்கள் இலக்கு கொண்டிருக்கிறார்கள். இந்தத் தகவலை நிதியமைச்சும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 6 வழக்குகள் 1 எம்டிபி சார்பிலும், 16 வழக்குகள் எஸ்ஆர்சி நிறுவனம் சார்பிலும் தொடுக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

வழக்கு தொடுக்கப்பட்ட பிரதிவாதிகளில் உள்நாட்டவரும் அடங்குவர். இவர்களிடம் இருந்து 300 மில்லியன் ரிங்கிட் மீட்க வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன.

1 எம்டிபி தொடர்பான ஊழல் பணத்தை மீட்க அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதி இதுவாகும்.