Home உலகம் இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல், 200 பேர் மரணம்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல், 200 பேர் மரணம்

624
0
SHARE
Ad

காசா: காசாவில் பாலஸ்தீனியர்களை குறிவைத்து நடத்தப்படும் சியோனிச தாக்குதல் அதன் இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ளது.

அனைத்துலக கண்டனம் மற்றும் கொடுங்கோன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுத்த போதிலும், இஸ்ரேல் தொடர்ந்து பயங்கரவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

அப்பாவி பொதுமக்களை தாக்கி, காசாவில் ராக்கெட்டுகள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதன் விளைவாக, கட்டிடங்கள் மற்றும் வீடுகள் அழிக்கப்பட்டதோடு, பாலஸ்தீனியர்களிடையே இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்தது.

#TamilSchoolmychoice

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, சியோனிச தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50- க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 200 பேர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

30- க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 1,200 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.