Home இந்தியா எழுத்தாளர் கி.இராஜநாராயணன் 98-வது வயதில் காலமானார்

எழுத்தாளர் கி.இராஜநாராயணன் 98-வது வயதில் காலமானார்

624
0
SHARE
Ad

புதுச்சேரி : தமிழ் எழுத்தாளர்களில் கரிசல் காட்டு எழுத்தாளர் என போற்றப்பட்டவரும் கி.ரா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவருமான கி.இராஜநாராயணன் 98-வது வயதில் மூப்பு காரணமாக நேற்று திங்கட்கிழமை (மே 17) புதுச்சேரியில் காலமானார்.

அவரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர்.

அவரின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

தென் தமிழகத்திற்கே உரிய கரிசல் காட்டு மொழி நடையில் பல நாவல்களையும் கட்டுரைகளையும், சிறுகதைகளையும் படைத்தவர் கி.ரா.

அவரின் கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள் என்ற இரு நாவல்கள் அவரின் கிராமத்து எழுத்து நடைக்கு பெருமை சேர்த்தவையாகும். கோபல்லபுரத்து மக்கள் நாவல் சாகித்திய அகாடமி விருதையும் கி.ராவுக்குப் பெற்றுத் தந்தது.

கரிசல் காட்டு கடுதாசி என்ற கட்டுரைத் தொடரையும் அவர் தனக்கே உரிய கிராமத்து பேச்சு வழக்கில் படைத்தார்.