Home நாடு அவசரநிலை என்றபோதும் மக்கள் பிரதிநிதிகள் கொவிட்-19 குறித்து பேச வேண்டும்

அவசரநிலை என்றபோதும் மக்கள் பிரதிநிதிகள் கொவிட்-19 குறித்து பேச வேண்டும்

561
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: அவசரநிலை காரணமாக மாநில சட்டமன்றம் மூடப்பட்டிருந்தாலும், கொவிட் -19 பரவுவதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை மாநிலத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து விவாதிக்க வேண்டும் என்று ஜோகூர் சுல்தான் விரும்புகிறார்.

ஜோகூரில் அதிகரித்து வரும் கொவிட் -19 சம்பவங்கள் குறித்து சுல்தான் இப்ராகிம் கவலை தெரிவித்தார். அங்கு நேற்று 699 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

தொற்று பரவுவதைத் தடுப்பதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதிலும் மாநில அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பங்கு உண்டு என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அவசரகாலத்தில் நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றமும் அமர முடியவில்லை என்றாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிலைமையை நிவர்த்தி செய்ய உதவ வேண்டும்.

“இதுபோன்று, ஜோகூரில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட கலந்துரையாடல் மற்றும் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

“இதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் தொற்று பரவுவதைத் தடுப்பது மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்ப்பது குறித்து தங்கள் கருத்துகளை முன்வைக்க முடியும்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.