அதே வேளையில் மரண எண்ணிக்கையும் ஒரு நாளில் 63-ஆக உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 533,367- ஆக உயர்ந்துள்ளது.
மொத்தம் பதிவான 7,478 தொற்று சம்பவங்களில் 7,473 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 5 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.
இதற்கிடையில் கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,665 -ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 464,727- ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 66,208 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 756 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 377 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை 63-ஐ தொட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 2,432 ஆக உயர்ந்திருக்கிறது.
அதனை அடுத்து சரவாக் 640 தொற்றுகளைப் பதிவு செய்தது. ஜோகூரில் 587 தொற்றுகள் பதிவாயின.