Home உலகம் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்து விசாரிக்க ஐ.நா ஒப்புதல்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்து விசாரிக்க ஐ.நா ஒப்புதல்

485
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அண்மையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான வன்முறை மோதல் குறித்து விசாரிக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவை வாக்களித்துள்ளது.

இஸ்லாமிய நாடுகளின் குழு கொண்டுவந்த தீர்மானத்திற்கு 24 வாக்குகள் கிடைத்து ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த 11 நாட்கள் கடுமையான சண்டையில் காசாவில் 242 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் இஸ்ரேலில் கொல்லப்பட்டனர்.

#TamilSchoolmychoice

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசேலமில் பல வாரங்களாக இஸ்ரேல்-பாலஸ்தீனிய பதற்றம் அதிகரித்த பின்னர் இந்த வன்முறை ஏற்பட்டது. இது முஸ்லிம்கள் மற்றும் யூதர்களால் போற்றப்படும் புனித தளத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது.