Home நாடு சீன விமானங்கள் குறித்து தூதரகம் விளக்கமளிக்க கோரப்படும்

சீன விமானங்கள் குறித்து தூதரகம் விளக்கமளிக்க கோரப்படும்

812
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய வான்வெளியில் சீனக் குடியரசின் விமானப்படை விமானங்கள் நேற்று பறந்ததை அடுத்து விஸ்மா புத்ரா சீன தூதரகத்தை விளக்கமளிக்கக் கோரியுள்ளது.

“இந்த விஷயத்தில் மலேசியாவின் தீவிர கண்காணிப்பை சீன வெளியுறவு அமைச்சரிடம் தெரிவிப்பேன்” என்று வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்தார்.

ஊடுருவலுக்கு எதிராக பெய்ஜிங்கிற்கு எதிர்ப்பு அறிக்கையை அமைச்சகம் வெளியிடும்.

#TamilSchoolmychoice

மலேசிய வான்வெளியில் நேற்று 16 சீன இராணுவ விமானப்படை விமானங்களை இடைமறிக்க மலேசிய போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக மலேசிய விமானப்படை தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான விமானங்கள் காலை 11.53 மணிக்கு சரவாக்கிலுள்ள வான் பாதுகாப்பு மையத்தால் கண்டறியப்பட்டன.