Home நாடு கொவிட்-19: சம்பவங்கள் குறைந்தாலும், இலக்கை அடையவில்லை!

கொவிட்-19: சம்பவங்கள் குறைந்தாலும், இலக்கை அடையவில்லை!

416
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, தொற்று வீதத்தையும் கொவிட் -19 சம்பவங்களின் தினசரி எண்ணிக்கையையும் குறைத்திருக்கிறது.

ஆனால், இது ஏழு நாட்களில் சராசரியாக 4,000- க்கும் குறைவான தினசரி நோய்த்தொற்றுகள் என்ற அரசாங்கத்தின் இலக்கை இன்னும் அடையவில்லை என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.

நாட்டின் தொற்று வீதம் இன்று நாடு முழுவதும் 0.96 ஆக உள்ளது. அதேசமயம் தினசரி புதிய கொவிட் -19 சம்பவங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

#TamilSchoolmychoice

“இது ஜூன் 1 அன்று செயல்படுத்தப்பட்ட முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையுடன் தொடர்புடையது. எட்டு நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், கொவிட் -19 சம்பவங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக உள்ளது, ஒரு நாளைக்கு 5,000- க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

“இது எங்கள் இலக்கு வரம்பை மீறுகிறது. ஏழு நாட்களுக்கு சராசரியான 4,000 க்கும் குறைவாக இருந்திருக்க வேண்டும், ”என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.