Home நாடு ஜூன் 16-இல் மலாய் ஆட்சியாளர்களுடன் மாமன்னர் சிறப்பு சந்திப்பு

ஜூன் 16-இல் மலாய் ஆட்சியாளர்களுடன் மாமன்னர் சிறப்பு சந்திப்பு

443
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மாமன்னர் சுல்தான் அப்துல்லா, அடுத்த புதன்கிழமை (ஜூன் 16) மலாய் ஆட்சியாளர்களுடன் சிறப்பு சந்திப்பை நடத்தவுள்ளார்.

இந்த சந்திப்பிற்கு மாமன்னர் தலைமை தாங்குவார் என்று அரண்மனை காப்பாளர் அகமட் பாடில் ஷம்சுடின் தெரிவித்தார்.

“இந்த விவாதங்கள் கொவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் மற்றும் அவசரகாலத்தின் போது அதைச் செயல்படுத்துவது குறித்தானது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முன்னதாக காலையில், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் மாமன்னரைச் சந்தித்தனர்.