Home நாடு மலாய் ஆட்சியாளர்களின் சந்திப்பு புதன்கிழமை மதியம் நடைபெறும்

மலாய் ஆட்சியாளர்களின் சந்திப்பு புதன்கிழமை மதியம் நடைபெறும்

547
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலாய் ஆட்சியாளர்களுக்கு இடையிலான சிறப்பு கலந்துரையாடல் நாளை புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

அரண்மனை காப்பாளர் டத்தோ அகமட் பாடில் ஷாம்சுடின் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை மூலம் இந்த விவகாரம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அரசு நிறுவனங்களைச் சேர்ந்த பல வல்லுநர்கள் சுகாதாரம், பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான விஷயங்கள் குறித்து ஆட்சியாளர்களிடம் நாளை விளக்கமளிக்க உள்ளனர்.