அம்னோவின் தேசியத் தலைவருமான சாஹிட், இது கட்சியின் முடிவு என்றும் கூறியுள்ளார்.
நாளை நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அவசர கால சட்டங்கள் மற்றும் அதன் அமுலாக்கங்களும் இரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என்றும் சாஹிட் கூறியிருக்கிறார்.
மலேசிய அரசியலமைப்பு சட்டம் 150 (7) விதியின்படி அவசர கால சட்டம் அமுலாக்கப்பட்டு 6 மாத கால நிறைவைக் கண்ட பின்னர் அந்த சட்டம் நாடாளுமன்றத்தால் இரத்து செய்யப்பட வேண்டும் -இல்லாவிட்டால் இயல்பாகவே மேலும் 6 மாதங்களுக்கு அந்த அவசர கால சட்டம் அமுலில் இருந்து வரும் என்பதையும் சாஹிட் சுட்டிக் காட்டினார்.
கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட அவசர கால சட்டம் தோல்வியடைந்து விட்டது என்றும் சாஹிட் தெரிவித்துள்ளார்.