Home நாடு கொவிட்-19; புதிய உச்சம் : மரணங்கள் 257 – தொற்றுகள் 19,519

கொவிட்-19; புதிய உச்சம் : மரணங்கள் 257 – தொற்றுகள் 19,519

2780
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 4) ஒரு நாள் வரையிலான மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்து 19,519 ஆகப் பதிவாகியது என சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

அதே வேளையில் மரண எண்ணிக்கை 257 ஆக அதிர்ச்சி தரும் வகையில் உயர்ந்திருக்கிறது. இவர்களில் மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் 21 பேர்களாவர். மருத்துவமனைகளிலேயே மரணமடைந்தவர்கள் 236 பேர்களாவர்.

இன்றைய மரண எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 9,855 ஆக உயர்ந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

210,522 பேர் மருத்துவமனைகளில் நாடு முழுமையிலும் கொவிட் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து கொவிட் காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 200 ஆயிரத்தை கடந்திருக்கிறது.

அவர்களில் 1,069 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 553 பேர்களுக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

கொவிட் தொடர்பான தொற்றுகளின் ஒருநாள் புள்ளி விவரங்களைக் மேற்கண்ட வரைபடத்தில் காணலாம்.

சிலாங்கூரில் மட்டும் 8,377 தொற்றுகள் பதிவாயின. கோலாலம்பூரில் 2,467 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன. இந்த இரு மாநிலங்கள் தவிர்த்து மேலும் 3 மாநிலங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்தன.

கெடா, கிளந்தான், ஜோகூர் ஆகியவையே அந்த 3 மாநிலங்களாகும். அந்த மாநிலங்களின் தொற்றுகளின் எண்ணிக்கையை மேலே உள்ள வரைபடத்தில் காணலாம்.