Home நாடு கொவிட்-19; மரணங்கள் 360! மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டவர்கள் 85!

கொவிட்-19; மரணங்கள் 360! மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டவர்கள் 85!

2901
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 8) ஒரு நாள் வரையிலான மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 18,688 ஆகப் பதிவாகியது என சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

அதே வேளையில் மரண எண்ணிக்கை  என்றுமில்லாத அளவுக்கு 360 ஆகப் பதிவாகியது.

இன்றைய மரண எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 10,749 ஆக உயர்ந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

மரணமடைந்தவர்களில் 275 பேர் மருத்துவமனைகளிலேயே மரணமடைந்திருக்கின்றனர். மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டவர்கள் 85 பேர்கள் ஆகும்.

ஒருநாளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,055 ஆகப் பதிவாகியது. இதைத் தொடர்ந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,026,398 ஆக உயர்ந்தது.

புதிய தொற்றுகளைத் தொடர்ந்து நாட்டில் இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,262,540 என பதிவாகியது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,095 ஆகும். இவர்களில் சுவாசக் கருவிகளின் உதவியோடு 571 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலங்கள் ரீதியான கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையை மேற்காணும் வரைபடத்தில் காணலாம்.

சிலாங்கூரில் மட்டும்  6,565 தொற்றுகள் பதிவாயின. கோலாலம்பூரில் 1,883 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன. இந்த இரு மாநிலங்கள் தவிர்த்து மேலும் 4 மாநிலங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்தன.

கெடா, நெகிரி செம்பிலான், ஜோகூர், சபா ஆகியவையே அந்த 4 மாநிலங்களாகும்.

225,393 பேர் மருத்துவமனைகளில் நாடு முழுமையிலும் கொவிட் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.