Home நாடு தேர்தல் ஆணையத்தின் தலைவரையும் சந்திக்கிறார் மாமன்னர் – 15-வது பொதுத் தேர்தல் பரிசீலிப்பா?

தேர்தல் ஆணையத்தின் தலைவரையும் சந்திக்கிறார் மாமன்னர் – 15-வது பொதுத் தேர்தல் பரிசீலிப்பா?

496
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் கானி பின் சாலேயை மாமன்னர் சந்திப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் காவல் துறையின் தலைவரான ஐஜிபி அக்ரில் சானி உள்ளிட்ட காவல் துறையின் உயர் அதிகாரிகளையும், சட்டத் துறை தலைவர் இட்ருஸ் ஹாருணையும் மாமன்னர் இன்று சந்திக்கிறார்.

இந்த சந்திப்புகள் அனைத்தும் பிரதமர் – மாமன்னர் இடையிலான சந்திப்புக்கு முன்னர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து நண்பகல் 12.30 மணியளவில் பிரதமர் மொகிதின் யாசின் மாமன்னரைச் சந்திக்கிறார்.

தேர்தல் ஆணையத் தலைவரையும் மாமன்னர் சந்திக்கவிருப்பதால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, 15-வது பொதுத் தேர்தல் நடத்தப்படும் சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை என சில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பான்மையை நிரூபிப்பதில் குழப்பங்கள் நிலவுவதால் நேரடியாக 15-வது பொதுத் தேர்தலை எவ்வளவு விரைவாக நடத்த முடியுமோ அவ்வளவு விரைவாக நடத்துவது, அதுவரை மொகிதின் யாசினை காபந்து பிரதமராகத் தொடரச் செய்வது போன்ற பரிந்துரைகளையும் மாமன்னர் பரிசீலிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.