Home நாடு 2 தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்கள் இனி உணவகங்களில் அமர்ந்து உண்ணலாம்

2 தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்கள் இனி உணவகங்களில் அமர்ந்து உண்ணலாம்

823
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : தேசிய மீட்சித் திட்டத்தின் கீழ் முதலாவது கட்டத்தில் இருக்கும் மாநிலங்கள், வட்டாரங்களில், நாளை முதல், 2 தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்கள் உணவகங்களில் அமர்ந்து உண்ணலாம் என்ற சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

காபந்து பிரதமரான மொகிதின் யாசின், தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் கூட்டத்திற்கு தலைமையேற்ற பின்னர் இந்த முடிவை அறிவித்தார்.

இதற்கிடையில், நாட்டில் முழுமையாக இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 11 மில்லியனைக் கடந்துள்ளது.

#TamilSchoolmychoice

அந்த அடிப்படையில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50.2 விழுக்காட்டினருக்கு இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன.