கொவிட் தொற்றுகளினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 252 ஆகப் பதிவாகியிருக்கிறது.
மரணமடைந்தவர்களில் 220 பேர் மருத்துவமனைகளில் மரணமடைந்தனர். மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் 32 பேர்.
இன்றைய மரண எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 15,802 ஆக உயர்ந்திருக்கிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 986 ஆகும். இவர்களில் சுவாசக் கருவிகளின் உதவியோடு 451 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிலாங்கூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகின.
பினாங்கு, கோலாலம்பூர், பேராக், ஜோகூர், கிளந்தான், ஆகிய மாநிலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகின.
கெடா, சபா, சரவாக் ஆகிய 3 மாநிலங்களும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்தன.