Home நாடு கொவிட்-19; தொடர்ந்து 22 ஆயிரத்தைக் கடந்த புதிய தொற்றுகள் – மரணங்கள் 252

கொவிட்-19; தொடர்ந்து 22 ஆயிரத்தைக் கடந்த புதிய தொற்றுகள் – மரணங்கள் 252

3384
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று  ஆகஸ்ட் 28 வரையிலான ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 22,070 ஆகப் பதிவாகின.

கொவிட் தொற்றுகளினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 252 ஆகப் பதிவாகியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,685,51 ஆக உயர்ந்தது.

#TamilSchoolmychoice

மரணமடைந்தவர்களில் 220 பேர் மருத்துவமனைகளில் மரணமடைந்தனர். மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் 32 பேர்.

இன்றைய மரண எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 15,802 ஆக உயர்ந்திருக்கிறது.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் புள்ளிவிவரங்களை மேற்கண்ட வரைபடத்தில் காணலாம்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 986 ஆகும். இவர்களில் சுவாசக் கருவிகளின் உதவியோடு 451 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலங்கள் ரீதியிலான கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையை மேற்கண்ட வரைபடத்தில் காணலாம்.

சிலாங்கூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகின.

பினாங்கு, கோலாலம்பூர், பேராக், ஜோகூர், கிளந்தான், ஆகிய மாநிலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகின.

கெடா, சபா, சரவாக் ஆகிய 3 மாநிலங்களும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்தன.