கொவிட் தொற்றுகளினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 282 ஆகப் பதிவாகியிருக்கிறது.
மரணமடைந்தவர்களில் 184 பேர் மருத்துவமனைகளில் மரணமடைந்தனர். மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் 98 பேர். மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிக அளவில் இருந்து வருகின்றது.
இன்றைய மரண எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 16,664 ஆக உயர்ந்திருக்கிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1005 ஆகும். இவர்களில் சுவாசக் கருவிகளின் உதவியோடு 464 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்றைய தொற்றுகளின் எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,746,254 ஆக உயர்ந்திருக்கிறது.
சிலாங்கூர் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளுடன் மிக அதிகமானத் தொற்றுகளைக் கொண்ட மாநிலமாக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
கெடா, பினாங்கு, பேராக், கோலாலம்பூர், ஜோகூர், கிளந்தான் ஆகிய 6 மாநிலங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகின.
சபா, சரவாக் மாநிலங்கள் 2 ஆயிரத்துக்கும் அதிகமானத் தொற்றுகளைப் பதிவு செய்தன.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal