Home இந்தியா நரேந்திர மோடி பிறந்த நாளில் 21 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

நரேந்திர மோடி பிறந்த நாளில் 21 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

709
0
SHARE
Ad

புதுடில்லி : இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள். அதனை முன்னிட்டு, இந்தியா முழுமையிலும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்படும் திட்டம் மேலும் விரைவுபடுத்தப்பட்டதில் 21 மில்லியன் தடுப்பூசிகள் இன்று ஒருநாளில் செலுத்தப்பட்டிருக்கின்றன.

இன்று மாலை இந்திய நேரப்படி 6.00 மணிவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தப் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இத்தகைய எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும்.

இன்று வெள்ளிக்கிழமை வரையில் இந்திய அரசாங்கம் 770 மில்லியன் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தி சாதனை புரிந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை வரலாற்றுபூர்வ நாளாக மாற்றும் நோக்கத்தில் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை விரைவுபடுத்தப்பட்டதாக இந்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்தார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal