Home இந்தியா கவிஞர் பிறைசூடன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

கவிஞர் பிறைசூடன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

527
0
SHARE
Ad

சென்னை : நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 8) தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தக்கக் கவிஞர்களில் ஒருவரான பிறைசூடன் உடல் நலக் குறைவால் காலமானார்.

அவரின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

“நல்ல பாட்டை மட்டுமே எழுதுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கும் என் ஊர்க்காரர் – உடன்பிறப்பு” என தலைவர் கலைஞரால் புகழப்பட்டவர்; திருவாரூர் மண்ணிலிருந்து புறப்பட்டுத் திரையிசையில் தனக்கெனத் தனியிடம் பிடித்த கவிஞர் கலைமாமணி பிறைசூடன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. பல தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், இரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.