மலேசியாவில் முதல் ஓமிக்ரோன் தொற்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரையில் மூன்று ஓமிக்ரோன் உருமாறியத் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.
இதற்கிடையில் கொவிட்-19 தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 35 மில்லியனை நெருங்கி வருகிறது.
ஓமிக்ரோன் தொற்று கண்டவர்களில் ஒருவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவராவார். 72 வயதான அவர் சிம்பாப்வே நாட்டில் பல ஆண்டுகளாக வசித்து வந்தவராவார். கடந்த நவம்பர் 28-ஆம் தேதி அவர் நாடு திரும்பினார்.
இன்று சனிக்கிழமை (டிசம்பர் 4) 8,603 தொற்றுகள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டன. மரண எண்ணிக்கை 415 என ஒருநாளில் பதிவாகி மொத்த மரண எண்ணிக்கை அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி 470,530 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.