இந்த பதவியிடங்களுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த மாதம் 24-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் தி.மு.க. தரப்பில் கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார் ஆகியோரும், அ.தி.மு.க. சார்பில் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரமும் (படம்) வேட்புமனு தாக்கல் செய்தனர். சுயேச்சையாக 7 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேரின் வேட்புமனுவை தள்ளுபடி செய்து தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசன் உத்தரவிட்டார். மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், வேட்புமனுக்களை திரும்பப்பெறுவதற்கான நேரம் 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில் வேட்புமனுக்களைச் சமர்ப்பித்த 6 பேரும் போட்டியின்றி தேர்வாகினர்.
திமுக சார்பில் கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோரும் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம், ஆர். தர்மர் இருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த ப.சிதம்பரம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.